Showing posts with label கோவில் நிலங்கள். Show all posts
Showing posts with label கோவில் நிலங்கள். Show all posts

Tuesday, August 5, 2014

அறநிலையத்துறையிடம் இருந்த 47,000 ஏக்கர் மாயமானதா?

தமிழகத்தில் கடந்த, 30 ஆண்டுகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை முறையாக பராமரிக்கவும், இதன் நிர்வாகத்தில் தனியாரால் தவறுகள் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையில் எடுத்தது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தான் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. முன்னோரும், அரசர்களும் கோவில்களுக்காக விட்டுச் சென்ற நிலங்கள் தொடர்ந்து தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே எல்லாரது விருப்பம். ஆனால், இந்த நிலங்களை பராமரிப்பது, பாதுகாப்பதில் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு, பொதுமக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

பராமரிப்பு இல்லை : கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்காததுடன், அதற்கான ஆவணங்களையும், அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

உதாரணமாக, நெல்லை அருகே, வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 4,500 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், இந்து சமய மக்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்ட ராமர் கோவிலுக்கு சொந்தமான, 5,400 ஏக்கர் நிலம் இப்போது கோவில் வசம் இல்லை. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 112 ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன நிலையில் உள்ளன என்பது புதிராக உள்ளது.

47 ஆயிரம் ஏக்கர் எங்கே? : இத்தனைக்கும் மேலாக அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை, ஆய்வு செய்ததில், கடந்த, 30 ஆண்டுகளில், ஏராளமான நிலங்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த, 1986ல், தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 'இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இது, 4.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, கடந்த, 30 ஆண்டுகளில், அறநிலையத்துறை நிர்வாகத்தில, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன ஆனது என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&

Monday, August 4, 2014

குப்பையாக கிடக்கும் கோவில் சொத்து ஆவணங்கள்!


கோவில் சொத்து ஆவணங்களை பாதுகாத்து பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அலட்சியமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன.ஒப்புதலுடன்...:அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டடங்களும், 33,665 கடைகளும் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.அறநிலையத் துறை சட்டத்தின், 29வது பிரிவின்படி, அந்த கோவில் குறித்த எல்லா விவரங்களையும், கோவில் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் தொகுத்து, பதிவு செய்யப்படும் பதிவேடுகள் மிக மிக முக்கியமானவை. அவை ஒரு வகையில், வரலாற்று ஆவணங்களும் கூட.கோவிலில் உள்ள பாத்திரங்கள், நகைகள், வாகனங்கள், சன்னிதிகள், கல்வெட்டுகள், சிலைகள், மண்டபங்கள், மரங்கள், பாரம்பரியம், திருவிழாக்கள், பரம்பரை அறங்காவலர்கள், நிலங்கள், என, அனைத்து விவரங்களும் அந்த பதிவேடுகளில் இருக்க வேண்டும்.கமிஷனர் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் அதை பராமரிக்க வேண்டும்.

அந்த சட்டத்தின் 30வது பிரிவின்படி, ஆண்டுதோறும் கோவில் சொத்துகளில் புதிதாக வந்தவற்றையும், நீக்கப்பட்டதையும் தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்க வேண்டும்.இதற்கு அடுத்தபடியாக, 31வது பிரிவின்படி, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை பெரிய கோவில்களுக்கு நேரடியாகவும், மற்ற கோவில்களுக்கு இணை கமிஷனர் வாயிலாகவும், பதிவேடு களுக்கு கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம்.ஆனால், இம்மூன்று சட்ட விதிகளின் அடிப்படையில் செய்ய வேண்டிய கடமைகளை அதிகாரிகள் சரிவர செய்யாததுடன், பெரும்பாலான கோவில்களில் சொத்து ஆவணங்களை கூட முறையாக பாதுகாக்க தவறுவதுடன், பல இடங்களில் ஆவணங்களை அழிக்கும் மோசடி சம்பவங்களும் நடக்கிறது என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.கிரிமினல் குற்றம்:விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்போர் அதை சரிவர செய்யாமல் இருப்பதும், அதற்கான ஆவணங்களை அழிப்பதும், சிறையில் தள்ளும் அளவுக்கு, கிரிமினல் குற்றமாக கருதப்படும் நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள், சட்ட விதிகளை அலட்சியப்படுத்துவதை அரசு தடுக்காமல் இருப்பது ஏன் என, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.திருவாரூரில் அவலம்இதுகுறித்து ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின், 29, 30, 31 ஆகிய விதிகளை அத்துறை அதிகாரிகளே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இரண்டாயிரம் ஏக்கர் நிலம்உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆவணங் கள் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு கோவில்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இத்தகைய மோசமான நிர்வாகத்தில் கோவில்கள் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து அறநிலையத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையும், கோவில்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்ளாததுமே இதற்கு முக்கிய காரணம் என்றார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=33937

Sunday, August 3, 2014

கோவில் நிலத்தில் கட்டுமானம்: தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்

கோவில் நிலத்தில் கட்டுமானம்: தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்


http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2014/08/03/ArticleHtmls/03082014002006.shtml?Mode=1

Sunday, April 13, 2014

50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் "சுவாகா!'


கோவில் மற்றும் அறக்கட்டளைகளின் நிலங்களை கையகப்படுத்துவது, கூடிய மட்டும் தவிர்க்கப் பட வேண்டும் என்றும், தகுந்த மாற்று நிலம் கிடைக்காத போது, கடைசி கட்டமாகத் தான் கோவில் நிலங்களை பொது நன்மைக்காக எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் அரசாணைகளும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களும், தெள்ளத்தெளிவாக கூறுகின்றன. "ஆணையரின் அனுமதி இல்லாமல் கோவில் சொத்துக்களை விற்க முடியாது, கோவிலின் நலனுக்கு விரோதமாகவும் விற்க முடியாது' என, அறநிலைய சட்டம் பிரிவு சு 34 கூறுகிறது. பிரிவுகள், 78 மற்றும் 79, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுக்கவும், இந்த துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறப்பான அதிகாரங்களை அளிக்கின்றன. சட்டமும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் இவ்வாறு இருக்கும் போது, கோவில் சொத்துக்களில் இருந்து, 90 சதவீதம் வருமானம் வராமல் இருப்பதும், மிகப் பெரிய அளவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், இந்த துறை தேவை தானா என்ற, கேள்வியை எழுப்புகிறது. வருமானத்தை தான் சரியாக பெறவில்லை. மதிப்பு மிக்க நிலங்களையாவது இந்த துறை காப்பாற்றுகிறதா என்றால், உங்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோவில்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் சொந்தமாக இருந்ததாக, அரசு கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. இந்து சமய நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலங்களின் பரப்பு, 4.78 லட்சம் ஏக்கர். அதாவது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் சேர்த்தால், ஏறத்தாழ, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்த துறை தொலைத்து உள்ளது. இது மிகப்பெரிய அநியாயம்! இப்படியே போனால் கோவில்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பதை நாம் கல்வெட்டில் தான் பார்க்கலாம். அந்த கல்வெட்டுகளும், புனரமைப்பு என்ற பெயரில், இந்த துறை அதிகாரிகளால், கண்மூடித்தனமாக பெயர்த்து எறியப்பட்டும், உடைக்கப்பட்டும் வருகின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். நடப்பது என்ன? நிலம் தேவை என்றால் தமிழக அரசு முதலில் கை வைப்பது கோவில் நிலங்களில் தான். அதிலும், 50, 60 ஏக்கர்கள் மேல் தேவை என்றால் அரசு வேறு எங்கும் தேடுவதில்லை. நேராக கோவில் நிலத்தில் கை வைத்துவிடுகிறது. கோவில் நிலத்தை விற்பதற்குத் தக்காருக்கோ, செயல் அலுவலருக்கோ எந்த உரிமையும் கிடையாது. அரசே முன் மொழிந்து, அரசே பரிந்துரை செய்து, அரசே விற்பனைக்கு ஒப்புதலும் அளிக்கும் அநியாயத்தை தமிழகத்திலும், புதுவையிலும் நாம் திரும்பத் திரும்ப பார்கலாம்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை கட்ட, இப்படி தான் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டது. இதில், மேலும் ஓர் அநியாயம், அப்படி கட்டடங்கள் கட்ட எடுத்துக் கொண்ட நிலங்களில், ஓர் ஏரியும் அடங்கும். நீர் நிலைகளில் எப்படி கட்டடங்கள் கட்டலாம்? அப்படி செய்தால், அரசுக்கும், சாதாரண ஏரி ஆக்கிரமிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?
கோவில் நிலங்கள் கொள்ளையில் நடக்கும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிலங்களுக்கு இழப்பீடு சம்பந்தமான கோப்பு, 10 ஆண்டுகளாக ஆணையர் அலுவலகத்தில் தூங்குகிறது
"மதுரையில், 50 ஏக்கர் நிலங்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் சொந்தம்' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பின்பும், தமிழக அரசும் அறநிலைய துறையும் சேர்ந்து, வழக்கில் தோற்றுப் போன ஆக்கிரமிப்பாளனுக்கே விலைமதிப்பற்ற அந்த நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தன
அதேபோல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வந்த பின்பும், மயிலாடுதுறை சாமவேத பாடசாலையின் நிலங்களை, இந்த துறை மீட்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
1976ம் ஆண்டு ஆவணங்களின் படி, சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில், 23 மனைகளும், அடையாறில், 500 மனைகளும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு சொந்தம் என, தெரிவிக்கின்றன. கோவில் நிர்வாகம் இப்பொழுது அடையாறில், 121 மனைகள் தான் உள்ளன என்று கூறுகிறது. தண்டையார்பேட்டை பற்றி பேச்சே இல்லை. கொள்ளையோ கொள்ளை. 
கடந்த 30 - 40 ஆண்டுகளில், கோவில்களும் அறக்கட்டளைகளும் இழந்த நிலங் களின் மதிப்பு, இன்றைக்கு குறைந்தது, 25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.


http://election.dinamalar.com/detail.php?id=4923