Showing posts with label கோயில் சொத்து ஆவணங்கள். Show all posts
Showing posts with label கோயில் சொத்து ஆவணங்கள். Show all posts

Monday, August 4, 2014

குப்பையாக கிடக்கும் கோவில் சொத்து ஆவணங்கள்!


கோவில் சொத்து ஆவணங்களை பாதுகாத்து பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அலட்சியமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன.ஒப்புதலுடன்...:அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டடங்களும், 33,665 கடைகளும் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.அறநிலையத் துறை சட்டத்தின், 29வது பிரிவின்படி, அந்த கோவில் குறித்த எல்லா விவரங்களையும், கோவில் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் தொகுத்து, பதிவு செய்யப்படும் பதிவேடுகள் மிக மிக முக்கியமானவை. அவை ஒரு வகையில், வரலாற்று ஆவணங்களும் கூட.கோவிலில் உள்ள பாத்திரங்கள், நகைகள், வாகனங்கள், சன்னிதிகள், கல்வெட்டுகள், சிலைகள், மண்டபங்கள், மரங்கள், பாரம்பரியம், திருவிழாக்கள், பரம்பரை அறங்காவலர்கள், நிலங்கள், என, அனைத்து விவரங்களும் அந்த பதிவேடுகளில் இருக்க வேண்டும்.கமிஷனர் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் அதை பராமரிக்க வேண்டும்.

அந்த சட்டத்தின் 30வது பிரிவின்படி, ஆண்டுதோறும் கோவில் சொத்துகளில் புதிதாக வந்தவற்றையும், நீக்கப்பட்டதையும் தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்க வேண்டும்.இதற்கு அடுத்தபடியாக, 31வது பிரிவின்படி, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை பெரிய கோவில்களுக்கு நேரடியாகவும், மற்ற கோவில்களுக்கு இணை கமிஷனர் வாயிலாகவும், பதிவேடு களுக்கு கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம்.ஆனால், இம்மூன்று சட்ட விதிகளின் அடிப்படையில் செய்ய வேண்டிய கடமைகளை அதிகாரிகள் சரிவர செய்யாததுடன், பெரும்பாலான கோவில்களில் சொத்து ஆவணங்களை கூட முறையாக பாதுகாக்க தவறுவதுடன், பல இடங்களில் ஆவணங்களை அழிக்கும் மோசடி சம்பவங்களும் நடக்கிறது என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.கிரிமினல் குற்றம்:விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்போர் அதை சரிவர செய்யாமல் இருப்பதும், அதற்கான ஆவணங்களை அழிப்பதும், சிறையில் தள்ளும் அளவுக்கு, கிரிமினல் குற்றமாக கருதப்படும் நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள், சட்ட விதிகளை அலட்சியப்படுத்துவதை அரசு தடுக்காமல் இருப்பது ஏன் என, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.திருவாரூரில் அவலம்இதுகுறித்து ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின், 29, 30, 31 ஆகிய விதிகளை அத்துறை அதிகாரிகளே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இரண்டாயிரம் ஏக்கர் நிலம்உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆவணங் கள் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு கோவில்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இத்தகைய மோசமான நிர்வாகத்தில் கோவில்கள் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து அறநிலையத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையும், கோவில்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்ளாததுமே இதற்கு முக்கிய காரணம் என்றார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=33937

Friday, April 18, 2014

'அறநிலைய துறை மூலம் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது'

சென்னை: ''அறநிலைய துறை சட்டத்தின் மூலம், கோவில் செயல் அலுவலரை நியமனம் செய்ய, வழிமுறை இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் அனைத்தும், செல்லு படியாகாது,'' என, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், டி.ஆர்.ரமேஷ் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம், தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலை, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து, ஆதீனத்திற்கு, அறநிலைய துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக, தருமபுர ஆதீனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலைய துறையின் நோட்டீசை ரத்து செய்தார். அவர் தன் தீர்ப்பில், 'அறநிலைய துறை சட்டப் பிரிவு ௪௫ன் படி, கமிஷனர், ஒரு கோவிலில் செயல் அலுவலரை நியமிக்க முடியாது' என, குறிப்பிட்டார். இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், ரமேஷ் கூறிய தாவது:

இந்து மத கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தில் கொண்டு வர முடியாது. 39 ஆயிரம் கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தின் கீழ் வைத்து உள்ளது, சட்ட விரோதம். கடந்த, 55 ஆண்டுகளாக, அதிகாரமே இல்லாத, இந்து சமய அறநிலைய துறை சட்டத்தின், 45வது பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களை மக்களிடம் இருந்து, அரசு பிடுங்கியுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் தீர்ப்பில், செயல் அலுவலர் நியமிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம், வழிகாட்டியுள்ளது.
* அதன்படி, ஒரு சமய நிறுவனத் தில், பெரும் நிர்வாகக் குறைபாடு இருந்தால் மட்டுமே, குறைபாடுகளை களைய, செயல் அலுவலரை குறுகிய காலத்திற்கு, நியமனம் செய்யலாம்.
* நிர்வாகத்தை சரி செய்யும் நோக்கம் மட்டுமே, அறநிலையத் துறைக்கு இருக்க வேண்டும்.
* சரி செய்த மறு நிமிடம், கோவிலை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
* செயல் அலுவலர் நியமன உத்தர வில், நியமன காலம் குறிப்பிடப்படாவிட்டால், அந்த உத்தரவு செல்லாது. அதையே, உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவலையும், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து சமய அறநிலைய துறை கமிஷனர், செயல் அலுவலரை, நியமனம் செய்ய, 45வது சட்டப்பிரிவை பயன்படுத்துகிறார். அந்த பிரிவில் இருக்க வேண்டிய நிபந்தனைகள், சட்டத்தில் இல்லை. அதனால், அந்த பிரிவை பயன்படுத்த, கமிஷனருக்கு எந்த அதிகார மும் கிடையாது. அதிகாரமே இல்லாத, அந்த பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களில், அறநிலைய துறை, செயல் அலுவலர்களை நியமித்து வந்துள்ளது. அதே தீர்ப்பு தான், வைத்தீஸ்வரன் கோவில் விவகாரத்திலும்,குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் நியமனம் செய்ய அதிகாரமே இல்லாத பிரிவை பயன்படுத்தி, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய கோவில்களில், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளது அறநிலைய துறை. பாக்கி இருப்பது அறநிலைய துறை சட்டம் அத்தியாயம், 6வது பிரிவின் மூலம் செயல் அலுவலர் நியமனம் செய்யும் அதிகாரம் தான். இந்த அத்தியாயத்தில் உள்ள பிரிவுகள், 1954ல், உச்சநீதிமன்றத் தால், தடை செய்யப்பட்ட பிரிவுகள். அவற்றை, 1959ல் புதிய சட்டம் இயற்றும்போது சத்தம் போடாமல், மீண்டும் கொண்டு வந்து விட்டது, அன்றைய தமிழக அரசு. அதனால் தானோ, என்னவோ, அறநிலைய துறை, ஒருமுறை கூட இந்த பிரிவை பயன்படுத்தவில்லை. மேம்பட்ட நிர்வாகம் என்ற காரணம் காட்டி, அறங்காவலர்களை நீக்கி விட்டு, தன் துறையை சேர்ந்த அதிகாரியை, 'தக்காராக' காலவரையின்றி நியமனம் செய்து, கோவில்களைக் கைப்பற்றப் பார்க்கிறது; இது, சட்டவிரோதம். இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. அறநிலைய துறை சட்டத் தின் மூலம் செயல் அலுவலரை நியமனம் செய்ய வழிவகையே இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் எவையும் செல்லுபடியாகாத நியமனங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=957122