Friday, August 10, 2018

மயிலை கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு; டிவிஎஸ் குழும தலைவர் 6 வாரங்களுக்கு கைதில்லை!

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்களுக்கு கைது செய்யமாட்டோம் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
mylapore kabaleeswarar temple idol theft case police won’t arrest tvs group chairman venu srinivasan for six weeks
சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்களுக்கு கைது செய்யமாட்டோம் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்கும் பணிகளை, டிவிஎஸ் குழுமம் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புனரமைப்பின் போது, முறைகேடு நடந்ததாகவும், அங்கிருந்த கோவில் சிலைகள், புராதன பொருட்கள் காணாமல் போனதாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்றும், 2004ல் கோவில் புனரமைப்பு நடந்த போது, அறப்பணிகள் குழு உறுப்பினராக தான் சேர்க்கப்பட்டதாகவும், தனது சொந்த செலவில் ரூ.70 லட்சத்தில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

2015ல் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அறங்காவலராக ரூ.25 கோடிக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக கூறினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்து வருவதாக தெரிவித்தார். 

No comments:

Post a Comment