Friday, August 10, 2018

மயிலை கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு; டிவிஎஸ் குழும தலைவர் 6 வாரங்களுக்கு கைதில்லை!

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்களுக்கு கைது செய்யமாட்டோம் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
mylapore kabaleeswarar temple idol theft case police won’t arrest tvs group chairman venu srinivasan for six weeks
சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரங்களுக்கு கைது செய்யமாட்டோம் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்கும் பணிகளை, டிவிஎஸ் குழுமம் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புனரமைப்பின் போது, முறைகேடு நடந்ததாகவும், அங்கிருந்த கோவில் சிலைகள், புராதன பொருட்கள் காணாமல் போனதாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்றும், 2004ல் கோவில் புனரமைப்பு நடந்த போது, அறப்பணிகள் குழு உறுப்பினராக தான் சேர்க்கப்பட்டதாகவும், தனது சொந்த செலவில் ரூ.70 லட்சத்தில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

2015ல் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அறங்காவலராக ரூ.25 கோடிக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக கூறினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்து வருவதாக தெரிவித்தார். 

TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு

 சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு

Aug 10, 2018 1:39 AM

மயிலாப்பூர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான மயில் சிலை களவாடப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்த டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான மயில் சிலை ஒன்று களவாடப்பட்டதாக புகார் எழுந்தது.

இங்கு பார்வதி மயில் ரூபத்தில் வந்து சிவனை மலர் தூவி பூஜித்தார் என்பதை நினைவூட்டும் வகையில், வாயில் குவளை மலரை கவ்வியபடி சிவலிங்கத்துக்கு மயில் ஒன்று பூஜை செய்வது போல, 1000 ஆண்டுகள் பழமையான கல்லாலான மயில் சிலை ஒன்று மூலவர் அருகே அமைக்கப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிசேகத்திற்கு பின்னர், அந்த பழமையான மயில் சிலையை அகற்றிவிட்டு புதிதாக ஒரு மயில் சிலை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட மயில் சிலையின் வாயில் மலருக்கு பதில் பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போல இருந்ததால் மயில் சிலை களவாடப்பட்டதை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். தொன்மையான மயில் சிலை மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை புகார் ஏதும் அளிக்காமல் மறைத்து வந்து நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் சிலை திருடி கடத்தப்பட்டதாகவும் அங்கு நடந்த கோவில் புனரமைப்பு பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ,இது குறித்து புகார் அளித்தால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் ரங்கராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் குறித்து விசாரித்து 6 வார காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகடத்தல் ஐஜி பொன்மாணிக்க வேல் தனது விசாரணையை இன்று தொடங்க இருக்கும் நிலையில், மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த, டிவி சுந்தரம் அய்யங்காரின் பேரனும் , டிவிஎஸ் குழுமங்களின் தலைவருமான, வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில் வேணு சீனிவாசன், 10 ஆயிரம் பேரை தொழிலாளர்களாக கொண்ட டிவிஎஸ் குழுமங்களின் தலைவராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், கேரளாவில் 100 க்கும் மேற்பட்ட கோவில்களை அறக்கட்டளை நிதியில் புனரமைத்து கொடுத்துள்ளதாகவும், அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மயிலாப்பூர் கோவிலின் அறங்காவலர் குழுதலைவராக இருந்து கும்பாபிசேகத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2015 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிசேகத்திற்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலும் முழுமையாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் மயிலாப்பூர் கோவிலில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றஞ்சாட்டி காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து தனக்கு ஏதுவும் தெரியாது என்றும், தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வேணு சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்றத்தை நாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Source : https://www.polimernews.com/view/23834-TVS-Group-Chairman-Venu-Srinivasan-bail-plea-for-fear-of-being-arrested-in-the-idol-theft-case 
 
 

Saturday, August 4, 2018

சீண்டிய அரசியல்வாதிகள்! சீறப்போகும் பொன்.மாணிக்கவேல்! செப்டம்பருக்கு பிறகு அதிரடி சரவெடி!

First Published 4, Aug 2018, 10:28 AM IST
 Ceylon politicians! pon.manickavel After September Action
Highlights
Ceylon politicians pon manickavel After September Action
சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ள விவகாரம் தமிழக அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அதன் பிறகு வெளியிட உள்ள தகவல்கள் இந்திய அரசியலையே கதிகலங்கச் செய்யும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்களான சிலைகள் பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் வந்த பிறகு தான் சிலை கடத்தல் மற்றும் அறநிலையத்துறையில் நடைபெற்று வரும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.
துவக்கத்தில் கோவில் பூசாரிகளில் கைது நடவடிக்கையை ஆரம்பித்த பொன்.மாணிக்கவேல் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையரான கவிதாவை கைது செய்துஇருக்கிறார். இது தான் ஒட்டு மொத்த தமிழக அரசையும் கதி கலங்க வைத்துள்ளது. அரசில் செயலாளர் அந்தஸ்தில் இருக்க கூடிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவை கைது செய்வதற்கு யாரிடமும் எந்த தகவலையும் சொல்லவில்லை.

நேராக அலுவலகத்திற்கு சென்று கவிதாவை கைது செய்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். மேலும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக பல அதிகாரிகளுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் எதிரான ஆதாரங்களை தீவிரமாக திரட்டி வருகிறார். பொன்.மாணிக்கவேல். மேலும் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து சில முக்கியஸ்தர்களை கைது செய்யும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளார் பொன்.மாணிக்கவேல். இந்த நிலையில் தான் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. அதிலும் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இது எல்லாம் நடக்கும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு தெரிந்தாலும் கூட தன் மீது நம்பிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியதை அவரால் ஏற்கமுடியவில்லை. இதனால் முடிந்த அளவிற்கு வரும் செப்டம்பர் மாதம் வரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவி நீடிக்க அவர் விரும்புகிறார்.
உயர்நீதிமன்றமும் சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக நீடிப்பார் என்று உத்தரவிடவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி எதிர்பார்தத்து நடக்காத பட்சத்தில், செப்டம்பர் மாதம் தான் ஓய்வு பெற்ற பிறகு, இந்த சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அத்தனை பேரின் பெயர்களையும் ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு வழங்க பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வெளியிடும் பட்டியலில் தமிழக முக்கியஸ்தர்கள் தொடங்கி டெல்லி முக்கியஸ்தர்கள் வரை இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-thirumavalavan-meet-pitwsj 

`உண்மையைச் சொன்னால் கவிதா மட்டுமல்ல...' - ஆதாரங்களுடன் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்


சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் கையிலிருக்கும் ஆதாரங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத்துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். தமிழகக் கோயில்களில் திருட்டுப்போன சிலைகளைக் கண்டுபிடித்தபோது ஆளுங்கட்சியினர் பொன்.மாணிக்கவேலின் செயலைப் பாராட்டிப் பேசினர். நீதிமன்றம்கூட, ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவை பிறப்பித்தது.
ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிலைகளைக் கண்டுபிடித்த அவர், தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்தது ஏனோ ஆளுங்கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. பழனியில் ஸ்பதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் ஆகியோர் மீது பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்ததை ஆளுங்கட்சியினர் ரசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஆளுங்கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால், ஓய்வு பெறுவதற்குள் சிலை முறைகேடுகளில் தொடர்புடையவர்களை சும்மா விடமாட்டேன் என்று பொன்.மாணிக்கவேல் டீம் கூடுதல் ஆணையர் கவிதாவை கைதுசெய்தது. கவிதாவுக்கு எதிராக காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு மட்டுமல்லாமல் திருவேற்காடு கோயில், திருத்தணி கோயில் எனப் பட்டியல் உள்ளது. 


இந்து அறநிலையத்துறையின் திருப்பணிகளின் கூடுதல் ஆணையரான கவிதா, அந்தப்பதவியில் நீண்டகாலமாக இருந்துவருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடக்கும் திருப்பணிகளை கவனித்துவந்த கவிதா மீது மூன்று ஆண்டுக்கு முன்பிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் குவியத் தொடங்கின. ஆனால், சில காரணங்களால் கவிதா இடமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது. கவிதாவுக்கு பக்கப்பலமாக இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும் அவர் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின. கவிதாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். மயிலாப்பூரில் குடியிருந்தார். 
கவிதா கைதானதும் அவருக்கு ஆதரவாக சிலர் அறிக்கை விட்டனர். அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கவிதாவின் கைது படலத்தோடு சிலை வழக்குகள் சி.பி.ஐ-யிடம் மாறப்போகிறது. பொதுவாக காவல்துறையில் சிலை தடுப்புப் பிரிவுப் பணி என்பது தண்டனைக்குரிய பணியாக கருதப்படும். லத்திகா சரண், டி.ஜி.பி-யாக இருந்தபோதுதான் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கு கடிவாளம் போடப்பட்டது. அப்போதும் பொன்.மாணிக்கவேல் அப்பிரிவில்தான் இருந்தார். சர்வதேச நெட்வொர்க் கும்பலுடன் சுபாஷ் கபூருக்கு உள்ள தொடர்புகள், உள்ளூர் பிரமுகர்கள் என எல்லாவற்றையும் விசாரணை மூலம் வெளியில் கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். 

கவிதாவையடுத்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இரண்டு பேருக்கு சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் குறி வைத்திருந்தனர். இந்தத் தகவல் ஆளுங்கட்சியினருக்குத் தெரியவந்ததும் உஷரான அவர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு செக் வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல், சமர்ப்பிக்கவுள்ள ஆதாரங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இடம்பிடிக்கும் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். முன்னதாக பொன்.மாணிக்கவேலுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறையினர். திருவேற்காடு கோயிலில் கவிதா தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
https://www.vikatan.com/news/tamilnadu/133030-ig-ponmanickavel-intervention-may-create-political-storm.html 


Thursday, August 2, 2018

Temple idols not stolen, say devotees


Idol Wing police has registered a false case; demand release of panel members

Stating that the Idol Wing police had registered a false case that idols were stolen from Rasa Kovil in Vellode in which two persons were arrested, members of the temple management committee and devotees in large numbers submitted petition to District Collector S. Prabhakar here on Thursday.
In their petition, members of Thenmugam Vellode Sathandai Kulam Rasa Swamy Narpani Mandram, said that over 10,000 people belongs to “Sathandai Koottam” of the Kongu Vellalar Gounder community and were offering prayers at the temple. In 1987, kumbabishekam was conducted and the stone idols were installed and prayers were offered. Later, the temple was taken control by the Hindu Religious and Charitable Endowment Department and later it was converted as scheme temple in 1991.
A committee was formed that administered the temple. Since, the temple was in a dilapidated state, a land was purchased near the temple and was handed over to the HR and CE Department on March 19, 2010. After obtaining the permission from the government, a temple was constructed and kumbabishekam was done on January 21, 2016. While the stone idols were kept in the new temple, the damaged idols continue to be in the old temple under the control of the department.
But, recently, based on a complaint lodged by a non-member of their “Koottam”, the police registered a case and arrested two persons of the committee. The petition said that no inquiry was conducted and case was registered. They urged the district administration to conduct proper inquiry and release the two persons.